அரியலூர் மாவட்டத்தில் - ஆட்சியர், வேட்பாளர்கள் வாக்களிப்பு :

By செய்திப்பிரிவு

அரியலூர் மாவட்டத்தில் ஆட்சியர் த.ரத்னா, அரியலூர் சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் தாமரை எஸ்.ராஜேந்திரன், மதிமுக வேட்பாளர் கு.சின்னப்பா, அமமுக வேட்பாளர் துரை.மணிவேல், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சுகுணாகுமார், ஐஜேகே வேட்பாளர் ஜவகர் உட்பட 13 வேட்பாளர்களும், ஜெயங்கொண்டம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் க.சொ.க.கண்ணன், அமமுக வேட்பாளர் ஜெ.கொ.சிவா, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மகாலிங்கம் உட்பட 11 வேட்பாளர்களும் நேற்று தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகேயுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தில் ஆட்சியர் த.ரத்னா வாக்களித்தார். அதேபோல, அரியலூர் தொகுதியில் போட்டி யிடும் அதிமுக வேட்பாளர் தாமரை எஸ்.ராஜேந்திரன் தாமரைக்குளம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும், மதிமுக வேட்பாளர் வழக்கறிஞர் கு.சின்னப்பா அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், அமமுக வேட்பாளர் துரை.மணிவேல் இலந்தைகூடம் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சுகுணாகுமார் சிலுப்பனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியிலும் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.

ஜெயங்கொண்டம் தொகுதி யில் போட்டியிடும் திமுக வேட்பாளர் க.சொ.க.கண்ணன் கண்டியங்கொல்லை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மகாலிங்கம் நாயகனைப்பிரியாள் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.

அதேபோல, பெரம்பலூர் மாவட்டம் குன்னம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் எஸ்.எஸ்.சிவசங்கர், அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகேயுள்ள தேவனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தனது வாக்கை பதிவு செய்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 min ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

51 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

இந்தியா

3 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்