பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதால் அங்கு சில மணி நேரம் வாக்குப்பதிவில் தாமதம் ஏற்பட்டது.
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தொகுதிக்கு உட்பட்ட மேட்டுக் காளிங்கராயநல்லூர் கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் நேற்று காலை 7 ஓட்டுகள் பதிவான நிலையில் வாக்குப் பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து மாற்று இயந்திரம் கொண்டுவரப்பட்டு வாக்குப் பதிவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதனால் வாக்குப் பதிவில் 2 மணி நேரம் தாமதம் ஏற்பட்டது. மேலும் குன்னம் தொகுதிக்கு உட்பட்ட கீழப்பெரம்பலூர், வசிஷ்டபுரம், காடூர் ஆகிய கிராமங்களில் உள்ள வாக்குச் சாவடி மையங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதால் வாக்குப் பதிவு சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக தொடங்கியது. இதனால் காடூரில் வாக்குப் பதிவு நேரத்தை நீட்டித்துத் தரக்கோரி திமுகவினர் வலியுறுத்தினர். அந்த கோரிக்கையை தேர்தல் அலுவலர்கள் நிராகரித்தனர்.
இதேபோல, வைத்தியநாதபுரம், பூலாம்பாடி, கொட்டாரக்குன்று, காருகுடி, காடூர், பொம்மனப்பாடி, வேலூர், பெரம்பலூர் நகரில் டோம்னிக் மேல்நிலைப் பள்ளி, தந்தை ரோவர் மேல்நிலைப் பள்ளி ஆகிய வாக்குச் சாவடிகளிலும் வாக்குப் பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது. இதை சரி செய்த பின்னர் வாக்குப் பதிவு தொடர்ந்தது. இதனால் சுமார் ஒரு மணி நேரம் வரை இங்குள்ள வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவில் தாமதம் ஏற்பட்டது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
18 mins ago
விளையாட்டு
9 mins ago
தமிழகம்
33 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
கருத்துப் பேழை
4 hours ago
இந்தியா
2 hours ago
கருத்துப் பேழை
4 hours ago
இந்தியா
2 hours ago
ஆன்மிகம்
2 hours ago