தனுஷ்கோடியில் கரை ஒதுங்கிய 7 தோட்டாக்கள் பறிமுதல் :

By செய்திப்பிரிவு

தனுஷ்கோடி கடற்கரையில் நேற்று காலை 7 துப்பாக்கி தோட்டாக்கள் கரை ஒதுங்கியது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் அருகே தனுஷ்கோடி வடக்குக் கடற்கரையில் நேற்று காலை மீனவர் ஒருவர் பிளாஸ்டிக் பொருட்களைச் சேகரித்தபோது வெள்ளை நிற பிளாஸ்டிக் பாட்டில் ஒன்று கிடந்தது. அதை அவர் திறந்து பார்த்தபோது அதில் துப்பாக்கி தோட்டாக்கள் இருந்தன.

தொடர்ந்து மீனவர் அளித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர் பிளாஸ்டிக் பாட்டிலை பறிமுதல் செய்து சோதனையிட்டனர். அதில் 5.6 எம்எம் வகையைச் சேர்ந்த 4 தோட்டாக்களும், 9 எம்எம் வகையைச் சேர்ந்த 2 தோட்டாக் களும், ஒரு டம்மி ப்ளாஸ்டிக் தோட்டா என மொத்தம் 7 பயன்படுத்தப்படாத தோட்டாக்கள் இருந்தன. இது குறித்து காவல்துறையினரும், மத்திய உளவுத் துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

24 mins ago

இந்தியா

46 mins ago

க்ரைம்

50 mins ago

இந்தியா

59 mins ago

விளையாட்டு

1 hour ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

10 hours ago

மேலும்