சின்னாளபட்டி பகுதியில் வீடு இல்லாத நெசவாளர்களுக்கு வீடு கட்டித் தரப்படும் என ஆத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தொகுதிக்குட்பட்ட சின்னாளபட்டி, சீவல்சரகு, ஜே.புதுக்கோட்டை, நெசவாளர் காலனி, அஞ்சுகம் காலனி உள்ளிட்ட பகுதிகளில் திமுக வேட்பாளர் ஐ.பெரியசாமி பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது: முன்னாள் முதல்வர் கருணாநிதி கொண்டுவந்த காப்பீட்டுத் திட்டம் மூலம் கைத்தறி நெசவாளர்களுக்கு உயர் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் நெசவாளர் காப்பீட்டுத் திட்டம் முடக்கப்பட்டதால் கைத்தறி நெசவாளர்கள் பணம் செலுத்தி மருத்துவ சிகிச்சை பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலை மாற சட்டப்பேரவைத் தேர்தலில் நீங்கள் திமுகவை ஆதரிக்க வேண்டும். 1972-ம் ஆண்டிலேயே நெசவாளர்களுக்கென காலனிகளை உருவாக்கினார் முன்னாள் முதல்வர் கருணாநிதி. பத்துக்கும் மேற்பட்ட நெசவாளர் குடியிருப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் வீடு இல்லாத கைத்தறி நெசவாளர்களுக்கு உயர் தரமான வீடுகள் கட்டித் தரப்படும் என்று பேசினார்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
51 mins ago
ஜோதிடம்
1 hour ago
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
6 hours ago
இந்தியா
7 hours ago
வணிகம்
8 hours ago
விளையாட்டு
8 hours ago
இணைப்பிதழ்கள்
8 hours ago
க்ரைம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago