நிகழ்ச்சிகள் நடத்த முன் அனுமதி கட்டாயம் காரைக்கால் மாவட்ட தேர்தல் அதிகாரி அறிவிப்பு

By செய்திப்பிரிவு

காரைக்கால் மாவட்ட தேர்தல் அதி காரியும், ஆட்சியருமான அர்ஜூன் சர்மா நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

இந்திய தேர்தல் ஆணையம், புதுச்சேரி சட்டப்பேரவைக்கான தேர்தல் அறிவிப்பை வெளியிட்ட நிலையில், பிப்.26-ம் தேதி முதல் மாதிரி நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.

அதன்படி, பொதுமக்கள், அரசி யல் கட்சியினர் நிகழ்ச்சிக்கு 48 மணி நேரத்துக்கு முன்னதாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் அனுமதி பெற்ற பின்னரே விழாக் கள், நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்.

சுவரொட்டிகள், விளம்பர பதாகைகள், கட்சிக் கொடிகள், தோரணம், ஆட்டோ விளம்பரங்களுக்கு உரிய முன் அனுமதி பெறவேண்டும். மீறினால் சட்டரீதி யான நடவடிக்கை எடுக்கப்படும். முன் அனுமதி பெற விரும்புவோர் தேர்தல் ஆணையத்தின் https://suvidha.eci.gov.in என்ற இணையதள முகவரி வழியாக விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

இந்தியா

6 mins ago

இந்தியா

45 mins ago

தமிழகம்

58 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்