முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்த நாளையொட்டி பாடி திருவல்லீஸ்வரர் கோயிலில், திருவள்ளூர் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில், 10 ஆயிரம் பேருக்கு அன்னதானம், 3 ஆயிரம் பேருக்கு வேட்டி, சேலை மற்றும் தையல் இயந்திரங்கள், சலவைப் பெட்டி ஆகியவை வழங்கும் விழாவை நேற்று நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
இவ்விழாவில், அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் பெஞ்சமின், பாண்டியராஜன், மாவட்ட செயலாளரும் அம்பத்தூர் எம்எல்ஏவுமான அலெக்சாண்டர் உள்ளிட்டோர் பங்கேற்க இருந்தனர்.
இந்நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் நேற்று காலமானார். இதையடுத்து, பாடி திருவல்லீஸ்வரர் கோயிலில் நடைபெற இருந்த அதிமுக நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டன. அதே நேரத்தில், ஏற்கெனவே அன்னதான விழாவுக்காக உணவு வகைகள் தயார் செய்யப்பட்டிருந்ததால், ஆயிரக்கணக்கானோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
வணிகம்
2 hours ago
விளையாட்டு
3 hours ago
தொழில்நுட்பம்
4 hours ago
சினிமா
5 hours ago
க்ரைம்
5 hours ago
விளையாட்டு
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
இந்தியா
6 hours ago
க்ரைம்
6 hours ago