தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ராமேசுவரத்தில் மீனவர்கள் சவப்பெட்டி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தடை செய்யப்பட்டுள்ள இரட்டைமடி வலைகளைப் பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ராமேசுவரத்தில் நாட்டுப்படகு மற்றும் பாரம்பரிய மீனவர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று ராமேசுவரம் பேருந்து நிலையத்திலிருந்து மீன்வளத் துறை உதவி இயக்குநர் அலுவல கத்துக்குச் சவப்பெட்டியை ஏந்தி ஊர்வலமாக வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு கடல் தொழிலாளர் சங்கத்தின் (சிஐடியூ) மாவட்டத் தலைவர் இ.ஜஸ்டின் தலைமை வகித்தார். துணைத் தலைவர் ஆரோக்ய நிர்மலா, மாவட்டச் செயலாளர் கருணாமூர்த்தி, மாவட்ட சிஐடியூ பொதுச்செயலாளர் சிவாஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
38 mins ago
தமிழகம்
1 hour ago
விளையாட்டு
2 hours ago
வாழ்வியல்
2 hours ago
தமிழகம்
3 hours ago
விளையாட்டு
4 hours ago
தமிழகம்
5 hours ago
ஓடிடி களம்
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
கருத்துப் பேழை
6 hours ago
தமிழகம்
5 hours ago