புதுச்சேரியில் ஆயுஷ் மருந்துகள் தயாரிக்கும் நிறுவனங்களின் கூட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி மாநிலத்தில் சித்தா, யூனானி, ஹோமியோபதி, ஆயுர் வேத மருந்துகள் தயாரிக்கும் நிறுவ னங்களின் கூட்டம் நேற்று முன்தினம் புதுச்சேரியில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது. சுஹாவின் நிறுவனரும், தலைவருமான சுசான்லிடாக்டர் ரவி தலைமை தாங்கி னார். தாத்திரி நிறுவனத்தின் பொது மேலாளர் ராஜேஷ்குமார் மற்றும் ரவிச்சந்திரன், அன்பரசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதில் ஆயுஷ் மருந்துகள் தயாரிப் பதற்கான அனுமதி வாங்குவதை விரைவுபடுத்த வேண்டும். புதுச்சேரி அரசு ஆயுஷ் மருந்துகளை புதுச் சேரி நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்வதற்கு முன்னுரிமை தர வேண்டும். புதிய ஆயுஷ் மருந்துகளை பரிசோதனை செய்துமேல்நிலை ஆய்வுக்கு பயன்படுத் துவதற்கான பரிசோதனைகூடம் தொடங்குவதற்கு இலவச இடம் வழங்க வேண்டும். புதுச்சேரிக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆளுநரை வரவேற்பது மற்றும் நேரில்சந்திப்பது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டன. ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
44 mins ago
சுற்றுச்சூழல்
1 hour ago
தமிழகம்
1 hour ago
க்ரைம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
கல்வி
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
கல்வி
3 hours ago
தமிழகம்
3 hours ago