திருக்கழுக்குன்றம் சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்ததற்கான ஆவணங்களை உடனுக்குடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட பதிவாளர் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் சார் பதிவாளர் அலுவலகத்தில், சுமார் 136 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பத்திரப்பதிவுகளை மேற்கொள்கின்றனர். இங்கு நாளொன்றுக்கு சராசரியாக 60 பத்திரப் பதிவுகள் நடைபெறுகின்றன. பத்திரப்பதிவு நடைமுறைகள் நிறைவு பெற்றாலும் அதற்கான ஆவணங்களை பெறுவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில், தமிழக பத்திரப் பதிவுத் துறைத் தலைவர் சங்கர், சென்னை மண்டலத்தில் உள்ள அனைத்து சார் பதிவாளர் அலுவலகங்களில் நடைபெறும் பத்திரப் பதிவுகளின் ஆவணங்கள் பொதுமக்களுக்கு உடனுக்குடன் வழங்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
அதன்படி, திருக்கழுக்குன்றம் சார் பதிவாளர் அலுவலகத்தில் மாவட்ட பதிவாளர் ராஜா, சார் பதிவாளர் (பொறுப்பு) இராமமூர்த்தி ஆகியோர் நேற்று நடைபெற்ற பத்திரப் பதிவுக்கான ஆவணங்களை உடனுக்குடன் வழங்கினர். மேலும், திருக்கழுக்குன்றம் சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு ஆவணங்களை தொடர்ந்து உடனுக்குடன் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
5 mins ago
தமிழகம்
21 mins ago
இந்தியா
22 mins ago
தொழில்நுட்பம்
28 mins ago
சினிமா
32 mins ago
இந்தியா
34 mins ago
தமிழகம்
38 mins ago
உலகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
45 mins ago
வாழ்வியல்
1 hour ago
சுற்றுலா
11 hours ago