மனைவி தற்கொலை: கணவர், மாமியாருக்கு சிறை கடலூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு

By செய்திப்பிரிவு

குறிஞ்சிப்பாடி ரெட்டியார் காலனி பகுதி யைச் சேர்ந்தவர் ராகுல்ராஜன் (41) மனைவி செந்தமிழ்செல்வி. ராகுல்ராஜன் அடிக்கடி பணம் கேட்டு மனைவி செந்தமிழ் செல்வியை கொடுமை படுத்தி வந்தார். கடந்த 28.8.2019-ல் செந்தமிழ்செல்வி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்தார். குறிஞ்சிப்பாடி போலீஸார் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு கடலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

நீதிபதி பாலகிருஷ்ணன் இவ்வழக் கில் ராகுல்ராஜனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், அவரது தாயார்மாரியம்மாளுக்கு 7 ஆண்டு சிறை தண்டணையும், இருவருக்கும் தலா ரூ 5 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு சிறப்பு வழக்கறிஞராக க.செல்வப்பிரியா ஆஜரானர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

தமிழகம்

4 hours ago

க்ரைம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

கல்வி

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

கல்வி

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்