கடலூர் மாவட்டத்தில் முன்னாள் முதல் வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா நேற்று கொண்டாட்டப்பட்டது.
கடலூர் மத்திய மாவட்ட அதிமுக செயலாளரும் தொழில்துறை அமைச்சருமான எம்.சி.சம்பத்தின் அறிவுறுத் தலின்படி அவரது மகன் பிரவீன் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று கடலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட் பட்ட அனைத்து வார்டுகளுக்கும் இளைஞர்கள் பயன்பெறும் வகையில் விளையாட்டு உபகரண பொருட்கள் வழங்கி னார். இந்நிகழ்ச்சியில் கடலூர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் ஏ.ஜி.தஷ்ணா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் கடலூர் சட்டமன்ற தொகுதி உட்பட்ட கீழ்குமாரமங்கலம் ஊராட்சியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா கடலூர் மாவட்ட அதிமுக துணைச்செயலாளரும், கடலூர் ஒன்றியக்குழு தலைவருமான தெய்வபக்கிரி தலைமையில் நடந்தது. ஊனமுற்றவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
கடலூர் கம்மியம்பேட்டையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு கடலூர் மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளரும், கடலூர் முன்னாள் நகர மன்ற துணைத்தலைவருமான சேவல்குமார் தலைமையில் பொதுமக் களுக்கு அன்னதானம் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் வசந்தராஜ், ரவிச்சந்தி ரன், வெங்கட் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர.
கடலூர் நீதிமன்ற வளாகத்தில் முன் னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா அரசு வழக்கறிஞர் ஜி. சந்திரசேகர் தலைமையில் கொண்டாடப்பட்டது.
விழுப்புரத்தில் பிறந்தநாள் விழா
விழுப்புரம் வடக்கு மாவட்ட அதிமுகஅலுவலகத்தில் நகர செயலாளர் பாஸ் கரன் தலைமையில் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
மேலும் விழுப்புரம், வண்டிமேடில் மாவட்ட ஜெயலலிதா பேரவை தலைவர்ராமதாஸ் தலைமையிலும், மாதா கோயில்அருகே மாவட்ட எம்ஜிஆர் இளைஞ ரணி செயலாளர் பசுபதி தலைமையிலும், மாம்பழப்பட்டு சாலையில் மாவட்ட ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் திருப்பதி பாலாஜி, மருத்துவர் முத்தையன் தலைமையிலும் ஜெயலலி தாவின் உருவப்படத்திற்கு மாலை அணித்து ஏழை, எளியோருக்கு அன்ன தானம் வழங்கினர்.
புதுச்சேரியில் கொண்டாட்டம்
ஜெயலலிதாவின் 73-வது பிறந்த நாள் விழா புதுச்சேரியில்நேற்று பல்வேறு இடங்களில் கொண்டாடப்பட்டது.புதுச்சேரி மேற்கு மாநில அதிமுக சார்பில் லெனின் வீதியில் உள்ள கட்சிஅலுவலகத்தில் ஜெயலலிதா உருவப் படத்திற்கு மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர் நேற்று மலரஞ்சலி செலுத்தினார். நிர்வாகிகள், பொது மக்கள் அஞ்சலி செலுத்தினர். பொதுமக்களுக்கு இனிப்புவழங்கப்பட்டது. பின்னர் அதிமுகவினர் ஊர்வலமாக சென்று 100 அடி சாலை யில் உள்ள ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி னர். தொடர்ந்து, அன்னதானம் வழங்கப் பட்டது. நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினர் கோகுலகிருஷ்ணன், முன் னாள் எம்.பி ராமதாஸ், முன்னாள் எம்எல்ஏ நடராஜன், மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
சுற்றுச்சூழல்
2 hours ago
தமிழகம்
3 hours ago
க்ரைம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
கல்வி
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
கல்வி
5 hours ago
தமிழகம்
5 hours ago