நீட் தேர்வுக்கு கூடுதல் மையங்கள் எம்.பி. வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

முதுநிலை நீட் தேர்வுக்கு தமிழகம், புதுச்சேரியில் கூடுதல் மையங்கள் அமைக்க வேண்டும் என சு.வெங்கடேசன் எம்.பி., மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் எழுதிய கடித விவரம்: இரண்டு நாட்களாக தமிழகத்தைச் சேர்ந்த நீட் முதுநிலைப் பட்ட தேர்வர்கள் என்னைத் தொடர்புகொண்டு தமிழ்நாடு, புதுச்சேரி மையங்கள் கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கின்றனர். ஆன்லைன் விண்ணப்பங்களுக்கான நேரம் தொடங்கி 4 மணி நேரத்துக்குள்ளாகவே தமிழகத்திலுள்ள தேர்வு மையங்கள் நிரம்பி விட்டதாகத் தெரிகிறது. ஆகவே, தேர்வர்கள் தமிழகத் தேர்வு மையத்தைத் தெரிவு செய்ய முடியவில்லை.

கரோனா காலத்தில் வேறு மாநிலங்களுக்குப் பயணம் செய்வதும், தங்குவதும் கடின மாக இருக்கும். எனவே, தேர்வர்களின் நியாயமான உணர்வுகளைப் புரிந்துகொண்டு தமிழ்நாடு, புதுச்சேரியில் கூடுதல் மையங்களை ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

இந்தியா

6 hours ago

க்ரைம்

7 hours ago

சினிமா

7 hours ago

இந்தியா

8 hours ago

வணிகம்

8 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்