கோவை வாகராயம்பாளை யத்தைச் சேர்ந்த தம்பதி கே.கருப்பசாமி (55), சம்பூர்ணம் (45). இவர்களது மகள் ராஜேஸ்வரி. இவரது கணவர், ஈரோடு மாவட்டம் மேற்குபள்ளபாளையம் பகுதியைச் சேர்ந்த ஆர்.பிரபு (35). இவர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. பெண் குழந்தை உள்ளது. இதில், கருப்பசாமியின் இளைய மகள் நிர்மலாவை திருமணம் செய்துவைக்குமாறு பிரபு கேட்டு வந்துள்ளார். இதனால், 6 மாதங்களுக்கு முன் நிர்மலாவுக்கு வேறு மாப்பிள்ளை பார்த்து பெற்றோர் திருமணம் செய்து வைத்துள்ளனர். அதிருப்தியில் இருந்த பிரபு, அவிநாசி பழங்கரை அருகே நேற்று முன்தினம் கருப்பசாமி, சம்பூர்ணம் ஆகியோருடன் பிரச்சினையில் ஈடுபட்டுள்ளார்.
மேலும், நிர்மலாவை திருமணம் செய்து தராதது குறித்து கேள்வி எழுப்பி, இரும்பு கம்பியால் தலையில் தாக்கியுள்ளார். காயமடைந்த தம்பதி, திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவிநாசி போலீஸார் வழக்கு பதிவு செய்து, பிரபுவை கைது செய்தனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
வணிகம்
4 hours ago
விளையாட்டு
4 hours ago
தொழில்நுட்பம்
5 hours ago
சினிமா
6 hours ago
க்ரைம்
6 hours ago
விளையாட்டு
7 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
இந்தியா
7 hours ago
க்ரைம்
8 hours ago