பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூரில் சத்துணவு ஊழியர்கள் மறியல்

By செய்திப்பிரிவு

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருப்பூரில் போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் 253 பேர் கைது செய்யப்பட்டனர்.

சத்துணவு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும், குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் வழங்க வேண்டும், ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு ஒட்டுமொத்த தொகை வழங்க வேண்டும். அமைப்பாளர்களுக்கு ரூ.5 லட்சம், சமையலர், சமையலர் உதவியாளர்களுக்கு ரூ.3 லட்சம் வழங்க வேண்டும்.

பள்ளி சத்துணவு மையங்களில் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் நிரப்ப வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் திருப்பூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு நேற்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்ட தலைவர் பி.பாக்கியம் தலைமை வகித்தார். துணைத் தலைவர் ஜெயமேரி வரவேற்றார். இதில் பங்கேற்ற பெண்கள் பலர் கறுப்பு நிற சேலையை அணிந்திருந்தனர். கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.

இதற்கிடையே, ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தில் மறியலை கைவிடும்படி தெரிவித்தனர். இதற்கு உடன்படாததால் போராட்டக்காரர்கள் மற்றும் போலீஸார் இடையே தள்ளு, முள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட 9 ஆண்கள் உட்பட 253 பேரை போலீஸார் கைது செய்தனர். வீரபாண்டி பகுதியிலுள்ள திருமண மண்டபத்தில் அவர்கள் தங்க வைக்கப்பட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

11 mins ago

இந்தியா

26 mins ago

ஆன்மிகம்

44 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

தமிழகம்

2 hours ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

3 hours ago

சினிமா

3 hours ago

மேலும்