மின் வேலி அமைத்த விவசாயி உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

தருமபுரி அடுத்த சின்னகுரும் பட்டி பகுதியைச் சேர்ந்தவர் நாகம்மாள் (53). இவர், கடந்த 21-ம் தேதி மாலை வீட்டருகே உள்ள விளைநிலத்தில் இருந்து கால்நடைகளுக்கு புல் அறுத்து வர சென்றார்.

நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாத நிலையில் வீட்டில் இருந்தவர்கள் தேடிச் சென்றபோது அருகில் இருந்த விவசாய நிலத்தில் மின் விபத்தில் சிக்கி நாகம்மாள் உயிரிழந்தது தெரிய வந்தது. அருகில் உள்ள நிலத்தின் உரிமையாளர் வெங்கடாசலம் மின் வேலி அமைத்துள்ளார். அதை அறியாமல் புல் அறுக்க சென்ற நாகம்மாள் உயிரிழந்தார். வெங்கடாசலத்தை போலீஸார் தேடி வந்தனர். இந்நிலையில், அதே மின் வேலியில் சிக்கி வெங்கடாசலமும் உயிரிழந்தார்.இது தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

31 mins ago

சினிமா

41 mins ago

இந்தியா

49 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்