நாகர்கோவில்: தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட அனைத்து வகை மீன்பிடி படகுகள் மற்றும் பதிவு செய்யப்படாத படகுகள் மீன்துறை அலுவலர்களால் ஆண்டுக்கு ஒருமுறை ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. நடப்பாண்டில் கன்னியாகுமரி மாவட்டம் மேற்கு கடற்கரை பகுதியான குளச்சல் மீன்துறை உதவி இயக்குநர் அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள நாட்டுப் படகுகள் கடந்த ஜனவரி 3-ம் தேதி ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.
இதில் விடுபட்ட, மானிய விலை மண்ணெண்ணெய் பெறாமல் உள்ள தகுதியான 543 இயந்திரம் பொருத்தப்பட்ட நாட்டுப் படகுகளில் நேற்று ஆய்வு தொடங்கியது. மார்ச் 1-ம் தேதி வரை ஆய்வு நடைபெறுகிறது.
விடுபட்ட இயந்திரம் பொருத்தப்பட்ட நாட்டுப்படகு உரிமையாளர்கள் வரும் 1-ம் தேதிக்குள் உரிய ஆவணங்களுடன் தங்களது படகை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என, ஆட்சியர் மா.அரவிந்த் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
2 mins ago
ஓடிடி களம்
34 mins ago
கல்வி
48 mins ago
சினிமா
56 mins ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
விளையாட்டு
1 hour ago
வாழ்வியல்
1 hour ago
ஓடிடி களம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தொழில்நுட்பம்
2 hours ago