தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உண்டியல் பணம் மாதம் இரண்டு முறை எண்ணப்படும். அதன்படி இந்த மாதம் முதலாவதாக கடந்த 4-ம் தேதி உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. இதனைத் தொடர்ந்து 2-வது முறையாக நேற்று முன்தினம் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன.
கோயில் செயல் அலுவலர் பா.விஷ்ணு சந்திரன் தலைமையில், கோயில் பணியாளர்கள் மற்றும் சிவகாசி பதினெண்சித்தர் மடம் குருகுலம் வேதபாடசாலை உழவாரப்பணி குழுவினர் உண்டியல் பணத்தை எண்ணினர். மொத்தம் ரூ.2 கோடியே 53 லட்சத்து 27ஆயிரத்து 423 கிடைத்துள்ளது. அதேபோல 1,524 கிராம் தங்கம், 34,005 கிராம் வெள்ளி, 51 வெளிநாட்டு கரன்சிகளையும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
29 mins ago
தமிழகம்
1 hour ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
3 hours ago
விளையாட்டு
8 hours ago
தமிழகம்
8 hours ago
விளையாட்டு
9 hours ago
வாழ்வியல்
9 hours ago
தமிழகம்
11 hours ago
விளையாட்டு
11 hours ago
தமிழகம்
12 hours ago
ஓடிடி களம்
12 hours ago