தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் கடந்த 6 நாட்களாக பணிக்கு செல்லாமல் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நேற்று 6-வது நாளாக நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ராமச்சந்திரன் கோரிக்கை விளக்கவுரை ஆற்றினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் சந்திரன், நகராட்சி, மாநகராட்சி ஊழியர் சங்க பொறுப்பாளர் வெங்கடேசன், முன்னாள் மாவட்ட பொருப்பாளர்கள் ஜெய்சங்கர், பெருமாள், இளங்கோ ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
இதில், அலுவலக உதவியாளர் முதல் வட்டாட்சியர் வரை அனைத்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அலுவலர்களுக்கு மேம்படுத்தப் பட்ட ஊதியம், தனி ஊதியம் வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உட்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். முடிவில், மாவட்ட பொருளாளர் ஜெயபிரபா நன்றி கூறினார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
விளையாட்டு
3 hours ago
இந்தியா
4 hours ago
விளையாட்டு
5 hours ago
இந்தியா
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
ஜோதிடம்
7 hours ago
ஜோதிடம்
7 hours ago
ஜோதிடம்
7 hours ago