வெள்ளத்தில் அடித்துச் செல்லப் பட்ட பெண்ணின் சடலம் நேற்றுமீட்கப்பட்டது. அவரது குடும்பத் துக்கு ரூ.4 லட்சம் நிவாரணம், குழந்தைகளின் கல்வி செலவைஅரசே ஏற்கும் என துணை நிலை ஆளுநர் தமிழிசை குறிப்பிட் டுள்ளார்.
புதுச்சேரி சண்முகாபுரம் அடுத்த வடக்கு பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சசிகுமார். இவரது மனைவி ஹசீனா பேகம் (35), மீன் வியாபாரம் செய்து வந்தார். இவர்களுக்கு 2 மகன்களும், ஒருமகளும் உள்ளனர். ஹசீனா பேகம்தனது வீட்டின் அருகில் உள்ள ஓடை பகுதியில் இருசக்கர வாகனத்தை நிறுத்தி இருந்தார். நேற்று முன்தினம் அதிகாலையில் பலத்த மழை பொழிந்ததால் இருசக்கர வாகனத்தை பாதுகாப்பான இடத்தில் எடுத்து விடுவதற்காக முயன்றார். அப்போது மழை வெள் ளத்தில் சிக்கி இருசக்கர வாகனத்துடன் அடித்துச் செல்லப்பட்டார்.
இதையறிந்த கோரிமேடு தீயணைப்பு வீரர்களும், மேட்டுப் பாளையம் போலீஸாரும் தேடும் பணியில் ஈடுபட்டனர். 2-வது நாளாக நேற்றும் தேடும் பணி நடந்தது. இந்நிலையில் நேற்று மதியம் ஹசீனா பேகத்தின்உடல் கனகன் ஏரியில் கரை ஒதுங்கியது. உடனே போலீஸார், தீயணைப்பு வீரர்கள் அவரது உடலைமீட்டு பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ரூ.4 லட்சம் நிவாரணம்
நேற்று மதியம் ஹசீனா பேகத்தின் உடல் கனகன் ஏரியில் கரை ஒதுங்கியது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
12 mins ago
தமிழகம்
21 mins ago
க்ரைம்
35 mins ago
வாழ்வியல்
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
43 mins ago
க்ரைம்
2 hours ago
சினிமா
2 hours ago
இந்தியா
2 hours ago
ஓடிடி களம்
2 hours ago
கருத்துப் பேழை
2 hours ago
தமிழகம்
2 hours ago