காவலர் குடும்பத்துக்கு ரூ.12.64 லட்சம் நிதியுதவி

By செய்திப்பிரிவு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவில் பணியாற்றி வந்த முதல்நிலைக் காவலர் ராஜேஷ்வரன், கடந்த 4.12.2020-ல் உடல்நலக்குறைவால் காலமானார். அவரது குடும்பத்துக்கு தனிப்பட்ட முறையில் நிதியுதவி செய்ய, அவருடன் 2008-ம் ஆண்டு காவலர் பணியில் சேர்ந்த தமிழகம் முழுவதுமுள்ள சுமார் 2,100 சக காவலர்கள் ரூ.12,64,364 நிதி திரட்டினர். இந்த நிதியை வங்கி காசோலையாக ராஜேஷ்வரனின் தந்தை சுடலைமணியிடம் எஸ்.பி ஜெயக்குமார் வழங்கினார்.

காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஏடிஎஸ்பி கோபி, தூத்துக்குடி டிஎஸ்பி கணேஷ், தனிப்பிரிவு ஆய்வாளர் பேச்சிமுத்து மற்றும் நிதி திரட்டிய காவலர்கள் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

37 mins ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

வாழ்வியல்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்