விபத்துகளை ஏற்படுத்தி காரை நிறுத்தாமல் சென்ற இளைஞர்கள் மீது மக்கள் தாக்குதல்

By செய்திப்பிரிவு

திருப்பூர்: திருப்பூர் வளையங்காடு பகுதியிலிருந்து நேற்று காலை புறப்பட்ட சொகுசு கார், அதிவேகமாகவும், தாறுமாறாகவும் சென்று வளையங்காடு, குமார் நகர் உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரம் நடந்து சென்ற சிலர் மீதும், மற்றொரு கார் மீதும் மோதி நிற்காமல் சென்றுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் உள்ளிட்டோர் இருசக்கர வாகனங்களில் அந்த காரை துரத்திச் சென்றனர்.

அவிநாசி சாலை எஸ்.ஏ.பி. சந்திப்பு அருகே காரை மடக்கி பிடித்த பொதுமக்கள், உள்ளே இருந்த 3 இளைஞர்களை வெளியே வரவழைத்து கடுமையாக தாக்கி அனுப்பர்பாளையம் போலீஸாரிடம் ஒப்படைத்தனர். போலீஸார் அவர்களிடம் விசாரித்ததில், "கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த சூர்யா (27), கேரளாவை சேர்ந்த ஃபைசல் (29), திருப்பூர் - காங்கயம் சாலை ராக்கியாபாளையம் பகுதியைச் சேர்ந்த சூர்யா (25) ஆகியோர் என்பதும், கோவையிலிருந்து நேற்று காலை காரில் புறப்பட்ட சூர்யா,ஃபைசல் ஆகியோர் திருப்பூர் வளையங்காடு வந்து, மற்றொரு சூர்யாவை காரில் ஏற்றிக்கொண்டு செல்லும்போது விபத்துகளை ஏற்படுத்தியதும் தெரியவந்தது.

கொலை செய்ய திட்டம்: மேலும் கோவை சாய்பாபா காலனி பகுதியில் ஒருவரை கொலை செய்ய திட்டமிட்டிருந்ததாக போலீஸார் சந்தேகிக்கின்றனர். அதோடு, அவர்களிடமிருந்து ஓர் அரிவாளும் கைப்பற்றப்பட்டுள்ளது. இதனால் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

32 mins ago

இந்தியா

46 mins ago

இந்தியா

56 mins ago

சுற்றுச்சூழல்

58 mins ago

இந்தியா

57 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

4 hours ago

மேலும்