காரைக்கால்: காரைக்காலுக்கு நேற்று முன்தினம் வந்த புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை, மாவட்ட பாஜக தலைவர் ஜெ.துரை சேனாதிபதி தலைமையிலான பாஜகவினர் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
அந்த மனுவில், காரைக்கால் பகுதி ஏழை, எளிய மாணவர்கள் பயன்பெறும் வகையில், காரைக்கால் பெருந்தலைவர் காமராஜர் கல்வியியல் கல்லூரியில் பி.எட் படிப்பில் கூடுதலாக 25 இடங்களில் மாணவர்களை சேர்க்க அனுமதி அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வர்த்தக மேம்பாட்டை ஏற்படுத்தும் வகையில் காரைக்கால்- மயிலாடுதுறை இடையே ரயில் போக்குவரத்து தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காரைக்கால் அரசு பொது மருத்துவமனையை மேம்படுத்த வேண்டும். கன மழை, புயலால் காரைக்கால் மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ள சாலைகளை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் குறிப்பிடப்பட்டிருந்தன.
முக்கிய செய்திகள்
இந்தியா
43 mins ago
இந்தியா
49 mins ago
இந்தியா
54 mins ago
கருத்துப் பேழை
2 hours ago
இந்தியா
1 hour ago
கருத்துப் பேழை
3 hours ago
இந்தியா
1 hour ago
ஆன்மிகம்
1 hour ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
3 hours ago
விளையாட்டு
7 hours ago
சினிமா
9 hours ago