விவசாயி வீட்டில்35 பவுன் நகை திருட்டு

By செய்திப்பிரிவு

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த வேலப்பாடி கிராமத்தில் வசிப்பவர் விவசாயி தரணிபாலன். இவர், கடந்த 26-ம் தேதி தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் சென்னையில் நடைபெற்ற மகளின் திருமணத்துக்கு சென் றுள்ளார்.

பின்னர், அவர் நேற்று மாலை வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் முன் பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்திருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்தவர், வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, பொருட்கள் சிதறிக்கிடந்தன. மேலும், பீரோவில் இருந்த 35 பவுன் நகை மற்றும் ரூ.10 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இது குறித்து ஆரணி கிராமிய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

சினிமா

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

4 hours ago

வாழ்வியல்

5 hours ago

தமிழகம்

5 hours ago

ஆன்மிகம்

4 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

மேலும்