ஓசூர் அலசநத்தம் அரசு நடுநிலைப் பள்ளியில் 350-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தேவையான மேஜை மற்றும் இருக்கைகள் இன்றி மாணவர்கள் சிரமப்பட்டு வந்தனர். இதுகுறித்து பள்ளி தலைமையாசிரியர் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் ஓசூர் எம்எல்ஏவிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
அதனடிப்படையில் புதிய மேஜை மற்றும் இருக்கைகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் ஓசூர் எம்எல்ஏ சத்யா தலைமை தாங்கி சட்டப்பேரவை தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.3.50 லட்சம் மதிப்பிலான புதிய மேஜை மற்றும் இருக்கைகளை அலசநத்தம் அரசுப் பள்ளிக்கு வழங்கினார். தொடர்ந்து பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நடவு செய்தார்.
மேலும் பள்ளி வளாகத்தில் கட்டப்பட்டுள்ள புதிய நூலக கட்டிடத்தை பார்வையிட்டார். இந்த நிகழ்வில் ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
10 mins ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
4 hours ago
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
9 hours ago
இந்தியா
10 hours ago
வணிகம்
11 hours ago
விளையாட்டு
11 hours ago
இணைப்பிதழ்கள்
11 hours ago
க்ரைம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago