பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை மத்திய அரசும், உள்ளாட்சி மற்றும் அரசு சார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மாதம்தோறும் ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 28 அம்ச கோரிக்கைகளை புதுச்சேரி அரசும் நிறைவேற்ற வலியுறுத்தி காரைக்கால் பழைய ரயிலடி அருகில் நேற்று அரசு ஊழியர்கள் ஒரு நாள் விடுப்பு எடுத்து, தர்ணாவில் ஈடுபட்டனர்.
முன்னதாக, காரைக்கால் தலைமை தபால் நிலையம் அருகிலிருந்து பேரணியாக புறப்பட்டு வந்து, தர்ணாவில் ஈடுபட்டனர். காரை பிரதேச அரசு ஊழியர் சம்மேளனத் தலைவர் பி.வி.சுப்ரமணியன் தலைமை வகித்தார். கவுரவத் தலைவர் ஜி.ஜார்ஜ், பொதுச் செயலாளர் எம்.ஷேக் அலாவுதீன், பொருளாளர் எஸ்.மயில்வாகனன் உள்ளிட்ட நிர்வாகிகள், ஊழியர்கள் கலந்துகொண்டனர். முன்னதாக, அரசு ஊழியர் சம்மேளன முன்னாள் கவுரவத் தலைவர் ஜெயசிங் மறைவுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
முக்கிய செய்திகள்
இந்தியா
7 mins ago
இந்தியா
29 mins ago
இந்தியா
44 mins ago
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
4 hours ago
விளையாட்டு
8 hours ago
விளையாட்டு
9 hours ago
இந்தியா
10 hours ago
வணிகம்
11 hours ago
விளையாட்டு
12 hours ago
இணைப்பிதழ்கள்
12 hours ago
க்ரைம்
12 hours ago