கோவில்பட்டி பசுவந்தனை சாலையில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளை, கூட்டுறவு விற்பனை இணையத்தின் பெட்ரோல்பங்க், புதுசாலையில் அமைக்கப்பட்டுள்ள ஏடிஎம் ஆகியவற்றின் திறப்பு விழா நடைபெற்றது.
ஆட்சியர் கி. செந்தில்ராஜ் தலைமை வகித்தார். கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ திறந்து வைத்தார். செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ குத்து விளக்கேற்றினார். 345 பேருக்கு 2.35 கோடி கடன் உதவிகள் வழங்கப்பட்டன.
அமைச்சர் செல்லூர் கே.ராஜு பேசும்போது, ``தமிழகத்தில் நஷ்டத்தில் இயங்கி வந்த கூட்டுறவு வங்கிகளை லாபத்தில் இயங்க வைத்துள்ளோம். 27 ஆயிரமாக இருந்த ரேஷன் கடைகளை, 33,030 ரேஷன் கடைகளாக உயர்த்தி உள்ளோம். 3,501 அம்மா நகரும் ரேஷன் கடைகள் தொடங்கி உள்ளோம். ரூ. 26 ஆயிரம் கோடியாக இருந்த கூட்டுறவு வங்கியின்இருப்புத் தொகை, தற்போது ரூ.59,507 கோடியாக உயர்ந்துள்ளது. அதிமுக ஆட்சியில் கூட்டுறவுத்துறை 21 விருதுகளை பெற்றுள்ளது” என்றார் அவர்.எம்எல்ஏ சின்னப்பன், கூட்டுறவுஇணைப் பதிவாளர் ரவிச்சந்திரன்உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 mins ago
தமிழகம்
10 mins ago
விளையாட்டு
23 mins ago
தமிழகம்
33 mins ago
சினிமா
37 mins ago
தமிழகம்
52 mins ago
இந்தியா
1 hour ago
வெற்றிக் கொடி
1 hour ago
இந்தியா
1 hour ago
வேலை வாய்ப்பு
1 hour ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago