கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் கரோனா தடுப்பூசி போடும் பணி தொடக்கம்

By செய்திப்பிரிவு

கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் கரோனா தடுப்பூசி போடும் பணி நேற்று தொடங்கியது. கோவையில் தடுப்பூசி போடும் பணியை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கிவைத்தார்.

பொள்ளாச்சி

திருப்பூர்

உடுமலை

உதகை

உதகை சேட் நினைவு அரசு மகப்பேறு மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி முகாமை,மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா தொடங்கிவைத்தார். பின்னர் அவர் கூறும்போது, “சேட் மருத்துவமனை, குன்னூர் அரசு மருத்துவமனை, கேத்தி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. முதல் நாளில் 300 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதற்காக 5,300 டோஸ் கரோனா தடுப்பு மருந்து பெறப்பட்டு, மாவட்ட தடுப்பூசி மையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 4,845 பேர் தடுப்பூசி போடுவதற்காக இணையதளத்தில் பதிவு செய்துள்ளனர்” என்றார். முகாமில், மருத்துவ நலப் பணிகள் இணை இயக்குநர் பழனிசாமி, துணை இயக்குநர் பாலுசாமி, உறைவிட மருத்துவர் பாலசுப்ரமணியம், உதகை அரசு மருத்துவமனைக் கண்காணிப்பாளர் இரியன் ரவிக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

6 mins ago

தமிழகம்

9 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

வாழ்வியல்

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்