திருப்பூர்: திருப்பூர் மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், "திருப்பூர் மாவட்டத்தில் வரும் 15-ம் தேதி திருவள்ளுவர் தினம், 26-ம் தேதி குடியரசு தினம், 28-ம் தேதி வள்ளலார் நினைவு தினம் ஆகியவற்றை முன்னிட்டு, தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் கீழ் இயங்கும் மதுபானக்கடைகள் மற்றும் அவற்றுடன் இணைந்த மதுபானக்கூடங்கள், மனமகிழ் மன்றங்கள், உணவு விடுதிகளுடன் இணைந்து செயல்படும் அரசு உரிமம் பெற்ற மதுபானக்கூடங்கள் அனைத்தும், மேற்குறிப்பிட்ட 3 நாட்கள் முழு நேரமும் மூடப்பட்டு விற்பனை செய்வதை நிறுத்தம் செய்ய வேண்டும். தவறும்பட்சத்தில், தொடர்புடையவர்கள் மீது உரிய சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
38 mins ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
2 hours ago
விளையாட்டு
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
தமிழகம்
3 hours ago
வாழ்வியல்
3 hours ago
தமிழகம்
3 hours ago
ஆன்மிகம்
2 hours ago
கருத்துப் பேழை
4 hours ago
விளையாட்டு
4 hours ago