தூத்துக்குடி: குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ், தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 4 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
கோவில்பட்டி ஜீவா நகரைச் சேர்ந்த நவநீதகிருஷ்ணன் மகன் மணிகண்டன் (29), கோவில்பட்டி இந்திரா நகரைச் சேர்ந்த செல்லபாண்டி மகன் மாரியப்பன் (27) ஆகிய இருவரும், கொலை முயற்சி வழக்கில் கடந்த 12.12.2020-ம் தேதி கைது செய்யப்பட்டனர். 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக போக்ஸோ சட்டத்தின் கீழ், திட்டன்குளத்தைச் சேர்ந்த இருளாண்டி மகன் பாண்டியராஜ் (23), கடந்த 4.12.2020 அன்று கைது செய்யப்பட்டார். இதுபோல், விளாத்திகுளம் மீனாட்சியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த முனியசாமி மகன் ராஜா (34), கடந்த 9.12.2020 அன்று, கஞ்சா கடத்தியதாக கைதானார்.
இவர்கள் 4 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க, மாவட்ட எஸ்பி எஸ்.ஜெயக்குமார் பரிந்துரையின்பேரில், மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் நேற்று உத்தரவிட்டார். இவர்கள், 4 பேரும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
29 mins ago
இந்தியா
42 mins ago
தமிழகம்
1 hour ago
சுற்றுச்சூழல்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
1 hour ago
சினிமா
2 hours ago
இணைப்பிதழ்கள்
2 hours ago
வணிகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago