செங்கை மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பு: அதிகாரிகள் கவனிப்பார்களா?

By செய்திப்பிரிவு

இந்நிலையில் கடைகள், ஓட்டல்களில் அதிகாரிகள் சோதனை நடத்தி பிளாஸ்டிக் பயன்படுத்துவோருக்கு அபராதம் விதித்தனர். கெடுபிடி அதிகரித்ததால் பிளாஸ்டிக் பயன்பாடு குறைந்தது. தற்போது அதிகாரிகள் சோதனை செய்வது குறைந்து, பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது, "செங்கை மாவட்டத்தில் மீன், இறைச்சி கடை உள்ளிட்ட பல இடங்களில் வியாபாரிகள் பிளாஸ்டிக் பைகளில்தான் பொருட்களை வழங்குகின்றனர். ஓட்டல்களில் பிளாஸ்டிக் பைகளிலேயே உணவுப் பொருட்களை கொடுக்கின்றனர். இதனால் மீண்டும் பிளாஸ்டிக் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. சுற்றுச்சூழலுக்கு கேடுதரும் பிளாஸ்டிக் பைகளில் பொருட்களை வழங்குவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

4 hours ago

சினிமா

5 hours ago

தொழில்நுட்பம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

கல்வி

6 hours ago

சுற்றுச்சூழல்

6 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்