வாணியம்பாடி அருகே தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற லாரி ஓட்டுநர் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து காவல் துறையினர் கூறியதாவது:
திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் பார்த் தீபன் (42). இவர், சென்னையில் இருந்து திருப்பத்தூருக்கு சரக்குகளை ஏற்றிக்கொண்டு நேற்று காலை திருப்பத்தூர் நோக்கி லாரியில் வந்து கொண் டிருந்தார்.
வாணியம்பாடி ஜீவா நகர் பகுதியில் சாலையோரம் லாரியை நிறுத்தியவர், தேநீர் அருந்த சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது, அவ் வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதியது.
இதில், தூக்கி வீசப்பட்ட பார்த்தீபன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வாணியம்பாடி நகர காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 mins ago
தமிழகம்
8 mins ago
தமிழகம்
16 mins ago
கல்வி
26 mins ago
விளையாட்டு
31 mins ago
தமிழகம்
39 mins ago
விளையாட்டு
52 mins ago
தமிழகம்
1 hour ago
சினிமா
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
வெற்றிக் கொடி
1 hour ago