திருவண்ணாமலையில் தெற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் மோகன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று ஆலோசனைகளை வழங்கினார்.
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் துரிஞ்சாபுரம் மற்றும் கீழ்பென்னாத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட நிர்வாகிகள் கூட்டம் மற்றும் பெண்கள் பாசறை பூத் கமிட்டி அமைப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சரும் திருவண்ணாமலை தெற்கு மாவட்டச் செயலாளருமான அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், முன்னாள் அமைச்சரும் அதிமுக வழிகாட்டுதல் குழுவின் உறுப்பினருமான மோகன் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் மோகன் பேசும்போது, ‘‘சட்டப்பேரவை தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் பெண்கள் பாசறை பூத் கமிட்டி நிர்வாகிகள் உடனடியாக நியமிக்கப்பட்டு தேர்தல் பணியில் ஈடுபட வேண்டும். பத்தாண்டு கால அரசின் திட்டங்களை பொதுமக்களிடம் எடுத்துரைக்க வேண்டும். தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் நில அபகரிப்பு, ரவுடிசம், கட்டப்பஞ்சாயத்து இல்லாமல் தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ் கிறது’’ என்றார்.
இந்தக் கூட்டத்தில், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் அரங்கநாதன், ஒன்றியச் செயலாளர் ஜெயபிரகாஷ், அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி செயலாளர் தொப்பளான், பேரூராட்சி செய லாளர்கள் செல்வமணி, ஓ.சி.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 mins ago
வெற்றிக் கொடி
27 mins ago
இந்தியா
30 mins ago
வேலை வாய்ப்பு
42 mins ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago