கனமழையால் நிரம்பி வழியும் படுகை அணையை காண மக்கள் கூட்டம் கூட்டமாக வருவதால் செல்லிப்பட்டு கிராமம் திடீர் சுற் றுலாத் தலமாக மாறியுள்ளது.
‘நிவர்’ மற்றும் ‘புரெவி’ புய லால் புதுச்சேரியில் கனமழை பெய்து தாழ்வான இடங்கள், குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. தொடர் மழையால் ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன. புதுச்சேரியில் உள்ள 84 ஏரிகளில் பெரும்பாலான ஏரி கள் நிரம்பியுள்ளன.
குறிப்பாக புதுச்சேரியின் பெரியஏரியான ஊசுட்டேரி, இரண்டா வது பெரிய ஏரியான பாகூர் ஏரி ஆகியவை நிரம்பி கடல்போல் காட்சியளிக்கின்றன. மேலும்படுகை அணைகள், அணைக் கட்டுகள், நீர் வரத்து வாய்க்கால்கள் நிரம்பி வழிகின்றன. நிரம்பி வழியும் அணைகள், வாய்க்கால்களில் கிராமத்து இளைஞர்கள் குளித்து மகிழ்ந்து, நண்பர்களுடன் மீன் களைப் பிடித்து உற்சாகமாக பொழுதை கழிக்கின்றனர்.
குறிப்பாக புதுச்சேரி அடுத்தசெல்லிப்பட்டு - பிள்ளையார்குப்பம் இடையே சங்கராபரணி ஆற்றின் குறுக்கே பிரெஞ்சு ஆட்சியில் 1906ம் ஆண்டு கட்டப்பட்ட படுகைஅணை நிரம்பி மழை நீர் வழிந் தோடுகிறது. இந்த அணையில் தண்ணீர் சீறிப்பாயும் அழகியத் தோற்றம் கண்கொள்ளாக் காட்சி யாக இருக்கிறது. இதைக் காண பலர் குடும்பத்துடன் வந்து செல்கின்றனர். குடும்பத்துடன் குளித் தும் மகிழ்கின்றனர்.
உள்ளூர் மக்கள் மட்டுமின்றி அருகில் உள்ள விழுப்புரம், கடலூர் மாவட்டங்களைச் சேர்ந்தகிராமத்தினரும் தங்கள் குடும் பத்துடன் செல்லிப்பட்டு அணைக்குபைக், கார் உள்ளிட்ட வாகனங் களில் கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றனர். ‘செல்பி’யும் எடுத் துக் கொள்கிறார்கள். இதனால் செல்லிப்பட்டு படுகை அணை பகுதி திடீர் சுற்றுலா தலமாக மாறியுள்ளது.
பிரெஞ்சு ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட இந்த பழமை வாய்ந்த படுகை அணையில் ஏற்கெனவே நடுப்பகுதியில் உடைப்பு ஏற்பட் டுள்ளது.
அதனை பராமரித்து பாதுகாப் பதும் அவசியம் என்று இங்கு வந்து செல்வோர் தெரிவிக்கின்றனர்.
அணையில் தண்ணீர் சீறிப்பாயும் அழகியத் தோற்றம் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கிறது.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 mins ago
தமிழகம்
53 mins ago
தமிழகம்
54 mins ago
க்ரைம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
க்ரைம்
3 hours ago
கல்வி
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
க்ரைம்
3 hours ago
ஜோதிடம்
3 hours ago