புதுச்சேரி அரசு 5 ஆண்டுகளாக உறக்கத்தில் உள்ளது பாஜக பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா கருத்து

By செய்திப்பிரிவு

தேர்தல் வாக்குறுதியை நிறை வேற்றாத புதுச்சேரி காங்கிரஸ் அரசை கண்டித்து பாஜக சார்பில் 72 மணிநேர தொடர் கண்டன ஆர்ப்பாட்டம் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. மாநில பாஜக தலைவர் சாமிநாதன் (நியமன எம்எல்ஏ) தலைமையில் அண்ணா சிலை அருகே நடந்த போராட்டத்தில் 6 மணி நேரத்திற்கு ஒரு முறை புதுவையில் உள்ள ஒவ்வொரு தொகுதியையும் சேர்ந்த கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். நேற்று இப்போராட்டம் நிறைவு பெற்றது.

புதுவை மாநில பாஜக பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா போராட்டத்தை முடித்து வைத்து பேசியதாவது:

ராகுல்காந்தி எங்கெல்லாம் பிரச்சாரத்திற்கு செல்கிறாரோ அங்கெல்லாம் பாஜக வெற்றி நிச்சயமாகிறது. சமீபத்தில் பீகாரில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தல் அதை நிரூபித்துள்ளது. காங்கிரஸ் அரசை பொருத்தவரை வாய் மட்டுமே வேலை செய்யும். புதுவையில் உள்ள நாராயணசாமி தலைமையிலான அரசும் இதற்கு உதாரணம். 5 ஆண்டுகளாக உறக்கத்தில் தான் உள்ளனர்.

மத்திய அரசின் திட்டங்களை புதுவையில் நிறைவேற்றாமல் இருப்பதுதான் காங்கிரஸ் அரசின் வேலை. என்று குறிப்பிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

7 hours ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

க்ரைம்

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்