ஐந்தாண்டுகளுக்குப் பிறகு ஊசுட்டேரி நிரம்பியது

By செய்திப்பிரிவு

புதுச்சேரியில் வீசிய ‘நிவர்’ மற்றும் ‘புரெவி’ புயல் காரணமாக கனமழை பெய்தது. இதன் காரணமாக புதுச்சேரியில் உள்ள பெரும்பாலான ஏரிகள், நீர்நிலைகள் நிரம்பியுள்ளன. குறிப்பாக புதுச்சேரியின் மிகப்பெரிய ஏரியான ஊசுட்டேரி 5 ஆண்டுகளுக்குப் பிறகுமுழுமையாக நிரம்பியுள்ளது. ஏரி நிரம்பியதால் ஏரிக்குவரும் உபரி நீர் வெளியேற் றப்படுகிறது. அழகிய சுற்றுச் சூழலுடன் கூடிய இந்த ஏரியின் நீர், நகர நீர் தேவையையும் பூர்த்திசெய்கிறது. ஐந்தாண்டுகளுக்குப் பிறகு ஊசுட்டேரி நிரம்பி இருப்பதை அறிந்த ஊசுடு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தீப்பாய்ந்தான் தலைமையில் அப்பகுதி மக்கள் ஏரிக்குச் சென்று, ஏரி நீரில் மலர் தூவி தங்கள் மகிழ்ச்சியை வெளிப் படுத்தினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

11 mins ago

சினிமா

16 mins ago

வாழ்வியல்

23 mins ago

தமிழகம்

29 mins ago

இந்தியா

40 mins ago

சினிமா

48 mins ago

இந்தியா

53 mins ago

இந்தியா

1 hour ago

உலகம்

1 hour ago

சினிமா

1 hour ago

இணைப்பிதழ்கள்

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்