ரஜினியின் அரசியல் கட்சி அறிவிப்பால் ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

By செய்திப்பிரிவு

ஜனவரி மாதம் அரசியல் கட்சி தொடங்குவேன் என நடிகர் ரஜினிகாந்த் அறிவித்திருப்பதை வரவேற்று, நாகை அவுரித் திடலில் ரஜின் மக்கள் மன்ற மாவட்ட இணைச் செயலாளர் குபேந்திரன் தலைமையில் ரஜினி ரசிகர்கள் நேற்று பட்டாசு வெடித்து, தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும், நாகை புதிய பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கும், கடை உரிமையாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் இனிப்புகளை வழங்கினர். இதேபோல, நாகூர் ஆண்டவர் தர்கா அலங்கார வாசலில் மாவட்ட துணைச் செயலாளர் சாகா மாலிம் தலைமையிலும், மயிலாடுதுறை பேருந்து நிலையம் முன் மாவட்டச் செயலாளர் டி.எல்.ராஜேஸ்வரன் தலைமையிலும் ரஜினி மக்கள் மன்றத்தினர் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட பொறுப்பாளர் கே.கே.முருகுபாண்டியன் தலைமையில் ஏராளமானோர் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டனர். பின்னர், “மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு நிர்வாகியும் தலா 200 பேர் வீதம் புதிய உறுப்பினர்களை கட்சியில் சேர்ப்பது” என உறுதி எடுத்துள்ளதாக முருகுபாண்டியன் தெரிவித்தார்.

கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் மாவட்டத் தலைவர் பரமேஸ்வரன் தலைமையில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் நேற்று பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 mins ago

இந்தியா

16 mins ago

இந்தியா

26 mins ago

சுற்றுச்சூழல்

28 mins ago

இந்தியா

27 mins ago

இந்தியா

41 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

50 mins ago

இந்தியா

49 mins ago

இந்தியா

56 mins ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

4 hours ago

மேலும்