தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் கடையநல்லூர் சட்டப்பேரவை உறுப்பினர் முஹம்மது அபூபக்கர் அளித்த மனுவில், “தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகே அமைக்க வேண்டும். கடையநல்லூர் வட்டாட்சியர் அலுவலகத்தை திறந்து, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். கடையநல்லூர் நகராட்சியில் 6 ஆயிரம் புதிய குடிநீர் இணைப்பு பணி கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. ஓராண்டு ஆகியும் இதுவரை புதிய குடிநீர் இணைப்பு வழங்கும் பணி 50 சதவீதம் கூட நிறைவடையவில்லை. குடிநீர் இணைப்புகளை விரைவில் வழங்கி, குடிநீர் விநியோகம் அனைத்து பகுதிகளுக்கும் ஒரே சீராக கிடைக்க செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். கடையநல்லூர் மணிக்கூண்டு அருகே உள்ள பூங்காவை சீரமைத்து திறக்க வேண்டும்.
கடையநல்லூர் கானான்குளம் கரையை உயர்த்தி மதினா நகர் குடியிருப்புக்குள் வெள்ளம் புகாமல் பாதுகாக்க வேண்டும் ” உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
26 mins ago
தமிழகம்
18 mins ago
தமிழகம்
59 mins ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
49 mins ago
க்ரைம்
1 hour ago
சுற்றுச்சூழல்
1 hour ago
இந்தியா
2 hours ago
சினிமா
2 hours ago
இந்தியா
2 hours ago
வர்த்தக உலகம்
2 hours ago
ஆன்மிகம்
2 hours ago