விருதுநகரில் 1,881 மையங்களில் வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம்

By செய்திப்பிரிவு

விருதுநகர் மாவட்டத்தில் 1,881 வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் செய்ய சிறப்பு முகாம் தொடங்கியது.

விருதுநகர் தங்கம்மாள் பெரியசாமி நாடார் நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கே.கே.எஸ்.எஸ்.என். நினைவு நடுநிலைப் பள்ளி ஆகிய இடங்களில் நேற்று நடைபெற்ற வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம் தொடர்பான பணிகளை மாவட்ட ஆட்சியர் இரா.கண்ணன் பார்வையிட்டார்.

அப்போது அவர் கூறியதாவது: 2021 ஜனவரி 1-ம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு 18 வயது நிரம்பியவர்கள் மற்றும் இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாதவர்கள் விண்ணப்பிக்கலாம். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 1,881 வாக்குச்சாவடி மையங்களில் நவ.22-ம் தேதியும் (இன்று) டிசம்பர் 12 மற்றும் 13 தேதிகளிலும் இச்சிறப்பு முகாம்கள் நடைபெறும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

30 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

மேலும்