வடகிழக்கு பருவமழை முன்னெச் சரிக்கை நடவடிக்கையை மாவட்டம் தோறும் மேற்கொள்ள தீயணைப்புத்துறை டிஜிபி ஜாபர்சேட் வலியுறுத்தியுள்ளார். இதைத்தொடர்ந்து அதற்கான முன்னேற்பாடுகளை குமரி மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து தீயணைப்பு துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். நாகர் கோவிலை அடுத்த சுங்காங்கடை அருகே கருப்புக்கோடு குளத்தில் வெள்ள அபாய ஒத்திகை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித் துறை அலுவலர் சரவணபாபு தலைமையில் நிலைய அலுவலர்கள் துரை, ராஜா மற்றும் தீயணைப்பு வீரர்கள் குளத்துக்குள் பெருக்கெடுத்த வெள்ளத்தில் சிக்கி கொண்டவர்களை மீட்டு, மருத்துவர் உதவியுடன் முதலுதவி சிகிச்சை அளிப்பது, பின்னர் மருத்துவமனைக்கு அவர்களை அனுப்பி வைப்பது போல் தத்ரூபமாக ஒத்திகை நடத்தி காண்பித்தனர்.
மேலும் மழை வெள்ளத்தில் சிக்கியவர்கள் காஸ் சிலிண்டர், வாகன டியூப், பயனற்ற தண்ணீர் பாட்டில்கள், வாழைத்தண்டு, கேன்கள், பிளாஸ்டிக் குடம், தேங்காய் கதம்பை போன்றவற்றை பயன்படுத்தி தங்களை எவ்வாறு காப்பாற்றிக் கொள்வது என்பது குறித்து ஒத்திகை நடத்திக் காண்பித்தனர்.
ரப்பர் படகு மூலம் வயதானவர் கள், பெண்கள், கால்நடைகளை காப்பாற்றுவது குறித்தும் செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. தண்ணீரில் மூழ்கி உயிருக்கு போராடுவோருக்கு எவ்வாறு முதலுதவி அளிப்பது என்பது குறித்தும் பொதுமக்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் கல்குளம் வட்டா ட்சியர் ஜெகதா, வருவாய் ஆய் வாளர்கள் சேவியர், அருள்சேகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
விளையாட்டு
4 hours ago
இந்தியா
5 hours ago
விளையாட்டு
6 hours ago
இந்தியா
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
ஜோதிடம்
7 hours ago
ஜோதிடம்
8 hours ago
ஜோதிடம்
8 hours ago