சிவகாசி வட்டாட்சியர் அலுவல கத்தில் உள்ள நில அளவைப் பிரிவில் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் சோதனை நடத்தி, கணக்கில் வராத ரூ.70,200-ஐ பறிமுதல் செய்தனர். 3 பேர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.
சிவகாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் நில அளவைப் பிரிவில் லஞ்சம் பெறப்படுவதாக மாவட்ட லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து, டி.எஸ்.பி. கருப்பையா, இன்ஸ்பெக்டர்கள் விமலா, பூமிநாதன் ஆகியோர் தலைமையிலான லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் நேற்று முன்தினம் மாலை அந்த அலுவலகத்தில் சோதனை நடத்தினர்.
அப்போது, நில அளவையர் அலுவலகத்தில் தரகர்களாகச் செயல்பட்ட சிவகாசியைச் சேர்ந்த பொன்ராஜ், ஆறுமுகம் ஆகியோரிடமிருந்து கணக்கில் வராத ரூ.70,200-ஐ லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக நில அளவையர் பாலசுப்பிரமணியன், தரகர்கள் பொன்ராஜ், ஆறுமுகம் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
3 hours ago
வணிகம்
5 hours ago
விளையாட்டு
5 hours ago
தொழில்நுட்பம்
6 hours ago
சினிமா
7 hours ago
க்ரைம்
7 hours ago
விளையாட்டு
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
இந்தியா
8 hours ago
க்ரைம்
8 hours ago