வெள்ள நிவாரணப் பணிகளை அமைச்சர் ஆய்வு

By செய்திப்பிரிவு

கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப்பகுதியில் கடந்த 18-ம் தேதி இரவு விடிய விடிய மழைபெய்தது. இதனால், இளையரசனேந்தல் ரோடு அரசு போக்குவரத்து பணிமனை அருகே ஓடை பகுதியில் அதிகளவு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக சாலையில் சுமார் ஒரு அடி அளவுக்கு மேலாக மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த வழியாகச் சென்ற வாகனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

இப்பகுதியில் மழைநீர் வழிந்தோட நகராட்சி மூலம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தப் பணிகளை அமைச்சர்கடம்பூர் செ.ராஜு பார்வையிட்டார். ஓடை பகுதியில் நீர் தேங்காமல் விரைவில் வழிந்தோட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ், விளாத்திகுளம் எம்எல்ஏசின்னப்பன், கோட்டாட்சியர் விஜயா, வட்டாட்சியர் மணிகண்டன் ஆகியோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

10 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

19 mins ago

இந்தியா

18 mins ago

இந்தியா

25 mins ago

இந்தியா

30 mins ago

கருத்துப் பேழை

3 hours ago

இந்தியா

37 mins ago

சுற்றுச்சூழல்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்