தூத்துக்குடி மீனவர்களை கச்சத்தீவு அருகே விரட்டியடித்த இலங்கை கடற்படையினர் லட்சத்தீவில் 10 பேர் கைது

By செய்திப்பிரிவு

தூத்துக்குடியில் இருந்து 8 விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களை கச்சத்தீவு அருகே இலங்கை கடற்படையினர் விரட்டியடித்துள்ளனர். இதுதவிர, லட்சத்தீவில் 10 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளத்தில் இருந்து 60-க்கும் மேற்பட்ட மீனவர்கள் 8 விசைப்படகுகளில், நேற்று முன்தினம் காலையில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். இவர்களை, அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் விரட்டியுள்ளனர். மீனவர்கள் தங்கள் வலைகளை அறுத்துவிட்டு அங்கிருந்து தப்பி வந்துள்ளனர்.

நீண்ட நேரம் கழித்து, மீனவர்கள் மீண்டும் அப்பகுதிக்கு சென்று தங்களது வலைகளை மீட்டு வந்ததாகவும், தொடர்ந்து கடலில் மீன்பிடித்து வருவதாகவும் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

10 மீனவர்கள் கைது

தருவைக்குளத்தில் இருந்துகடந்த 5-ம் தேதி ஒரு விசைப்படகில் ஜான்சன், சேயராஜன், அந்தோணிராஜ், தீபன், ஜோசப்,வின்சன், சின்ராஜ், அந்தோணிபிச்சை, விஜய், ரோஸ்டன் ஆகிய10 மீனவர்கள் கடலுக்கு சென்றனர். அவர்கள் கடந்த 17-ம் தேதிலட்சத்தீவு அருகே உள்ள மினிக்காய் தீவு பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்பகுதியில் மீன்பிடிக்க ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டிருந்தது.

அங்கு ரோந்து வந்த இந்திய கடலோர காவல்படையினர், தடைசெய்யப்பட்ட பகுதியில் மீன்பிடித்ததாக 10 மீனவர்களையும் மடக்கிப்பிடித்து, மினிக்காய் தீவில் உள்ளகடலோர பாதுகாப்பு போலீஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

10 mins ago

சினிமா

32 mins ago

இந்தியா

4 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

3 hours ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

6 hours ago

வாழ்வியல்

1 hour ago

இந்தியா

3 hours ago

மேலும்