அதிமுக ஆட்சி புதுவையில் அமைய பாடுபடுவேன் மேற்கு மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர் உறுதி

By செய்திப்பிரிவு

புதுச்சேரியில் அதிமுக ஆட்சி அமைப்பதற்கு பாடுபடுவேன் என்று மேற்கு மாநில அதிமுக செயலர் ஓம் சக்தி சேகர் தெரிவித்துள்ளார்.

புதுவை மேற்கு மாநில அதிமுக செயலாளராக ஓம்சக்தி சேகர் நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து தமிழக முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரிடம் வாழ்த்து பெற்ற ஓம்சக்திசேகர், புதுவையில் மூத்த நிர்வாகிகளை சந்தித்து வாழ்த்துக்களை பெற்றார்.

புதுவை சுதேசி மில் அருகில் இருந்து கழக நிர்வாகிகள், தொண்டர்களுடன் ஓம்சக்தி சேகர் நேற்று ஊர்வலமாக சென்று அண்ணா, எம்ஜிஆர், 100 அடி சாலையில் உள்ள ஜெயலலிதா ஆகியோரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மாநில செயலாளர் பணியை தொடங்கினார்.

அதைத்தொடர்ந்து ஓம்சக்தி சேகர் கூறியதாவது, "சாதாரண தொண்டனான என் மீது நம்பிக்கை வைத்து மாநில செயலாளர் பதவியை வழங்கியுள்ளனர். அவர்கள் இட்ட பணியை எந்தவித தொய்வும் இன்றி செய்வேன். கிளை கழகங்களுக்கு நேரில் சென்று கட்சியைப் பலப்படுத்துவேன். புதுவையில் அதிமுக ஆட்சியை அமர்த்த பாடுபடுவேன்" என்று குறிப்பிட்டார்.

நிகழ்ச்சியில் மாநில இணை செயலாளர்கள் திருநாவுக்கரசு, காசிநாதன், முன்னாள் எம்பி பேராசிரியர் ராமதாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

26 mins ago

வணிகம்

8 hours ago

சுற்றுச்சூழல்

1 hour ago

சுற்றுலா

1 hour ago

கல்வி

32 mins ago

தமிழகம்

1 hour ago

சுற்றுலா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

ஆன்மிகம்

3 hours ago

மேலும்