துப்பாக்கியால் சுட்டு ஒருவரை கொலை செய்த தியேட்டர் உரிமையாளர் நடராஜனுக்கு சிறையில் உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் பழநி அரசு மருத்துவமனையில் அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.
பழநியில் இடப் பிரச்சினை காரணமாக தியேட்டர் உரிமையாளர் நடராஜன்(74) துப்பாக்கியால் சுட்டதில் இரண்டு பேர் பலத்த காயம் அடைந்தனர். இதில் சுப்பிரமணி என்பவர் உயிரிழந்தார். இதையடுத்து கொலை வழக்குப் பதிவு செய்து நடராஜனை பழநி நகர் போலீஸார் கைது செய்து பழநி கிளைச் சிறையில் அடைத்தனர். சிறையில் நடராஜனுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனால் அவருக்கு நேற்று காலை பழநி அரசு மருத்துவமனையில் சர்க்கரை, ரத்த அழுத்தம் சீராக மருந்து வழங்கப்பட்டது. பின்னர் நடராஜன் மீண்டும் பழநி சிறையில் அடைக்கப்பட்டார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
25 mins ago
இந்தியா
58 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
வாழ்வியல்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
க்ரைம்
2 hours ago
இந்தியா
2 hours ago
சுற்றுலா
3 hours ago