திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே பெரியார் சிலைக்கு காவிச் சாயம் பூசியது தொடர்பான வழக்கில் இந்து மக்கள் கட்சி பிரமுகரை போலீஸார் கைது செய்தனர்.
ரெட்டியார்சத்திரம் அருகேயுள்ள சமத்துவபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள பெரியார் சிலைக்கு கடந்த அக். 26-ம் தேதி நள்ளிரவில் மர்ம நபர்கள் காவிச்சாயம் பூசினர். இதையடுத்து, காவிச்சாயம் பூசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பு மற்றும் மார்க்சிஸ்ட் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திமுக உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.
இது தொடர்பாக ரெட்டியார்சத்திரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், பெரியார் சிலை மீது காவிச்சாயம் பூசியது தொடர்பான வழக்கில் இந்து மக்கள் கட்சி பிரமுகர் ஜெகதீசனை போலீஸார் நேற்று கைது செய்தனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
தமிழகம்
2 hours ago
விளையாட்டு
3 hours ago
வாழ்வியல்
4 hours ago
தமிழகம்
5 hours ago
விளையாட்டு
5 hours ago
தமிழகம்
6 hours ago
ஓடிடி களம்
7 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
கருத்துப் பேழை
7 hours ago
தமிழகம்
7 hours ago