சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு குண்டர் சட்டத்தில் முதியவர் கைது

By செய்திப்பிரிவு

சிக்கல் கிராமத்தில் சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

ராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் காதர் மைதீன்(66). இவர் 19.9.2020 அன்று தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 2 சிறுமிகளை பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இது குறித்து கீழக்கரை அனைத்து மகளிர் போலீஸார் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து முதியவர் காதர் மைதீனை கைது செய்தனர்.

இந்நிலையில் இவர் தொடர்ந்து பாலியல் குற்றங்களில் ஈடுபடுவதைத் தடுக்கும் பொருட்டு குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய, ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் இ.கார்த்திக் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். அதையடுத்து ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், முதியவர் காதர் மைதீனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். தொடர்ந்து கீழக்கரை அனைத்து மகளிர் போலீஸார் முதியவரை கைது செய்து, மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

12 mins ago

விளையாட்டு

3 mins ago

தமிழகம்

27 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

இந்தியா

2 hours ago

ஆன்மிகம்

2 hours ago

மேலும்