கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 44 அடியாகவும், பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 70 அடியாகவும் உயர்ந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஒருவாரமாக கனமழை பெய்து வருகிறது. நேற்று அதிகபட்சமாக மயிலாடியில் 43 மி.மீ., பதிவானது. கொட்டாரத்தில் 19, சிற்றாறு ஒன்றில் 12, கன்னிமாரில் 14, நாகர்கோவிலில் 9, பேச்சிப்பாறையில் 10, புத்தன் அணையில் 10, ஆரல்வாய்மொழியில் 16, குருந்தன்கோட்டில் 7 மிமீ., மழை பெய்திருந்தது.
கனமழையால் மாவட்டத்தில் உள்ள 2,040 குளங்களில் 500-க்கும் மேற்பட்ட குளங்கள் நிரம்பி மறுகால் பாய்கின்றன. அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. பேச்சிப்பாறை அணைக்கு விநாடிக்கு 965 கனஅடி தண்ணீர் வருகிறது. நீர்மட்டம் 44 அடியாக உயர்ந்துள்ளது. பெருஞ்சாணிக்கு 675 கனஅடி தண்ணீர் வரும் நிலையில் நீர்மட்டம் 70 அடியை தாண்டியுள்ளது.
நாகர்கோவில் நகருக்கு குடிநீர் வழங்கும் முக்கடல் அணை நீர்மட்டம் 22 அடியாக உள்ளது. தொடர் மழை மற்றும் கடல் சீற்றத்தால் குமரியில் நேற்று கட்டுமரம் மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை.
முக்கிய செய்திகள்
தமிழகம்
13 mins ago
விளையாட்டு
21 mins ago
தமிழகம்
36 mins ago
ஓடிடி களம்
57 mins ago
தமிழகம்
46 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
விளையாட்டு
1 hour ago
சுற்றுலா
24 mins ago
தொழில்நுட்பம்
15 mins ago
தமிழகம்
51 mins ago