கிருஷ்ணகிரியில் கூட்டுறவு அங்காடிகளில் வெங்காயம் கிலோ ரூ.45-க்கு விற்பனை

By செய்திப்பிரிவு

கர்நாடக, ஆந்திர, மகாராஷ்டிர மாநிலங்களில் பெய்த மழையால் வெங்காய சாகுபடி வெகுவாக பாதிக்கப்பட்டது. இதனால் வரத்து குறைந்து, தமிழகத் தில் வெங்காயத்தின் விலை படிப்படியாக உயர்ந்தது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.100 வரையிலும், உழவர் சந்தைகளில் கிலோ ரூ.90-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில் அரசு ரூ.45-க்கு மானிய விலையில் பசுமை அங்காடிகளில் வெங்காயம் விற்பனை செய்யும் திட்டத்தை தொடங்கி உள்ளது. அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 9 அம்மா சிறு கூட்டுறவு சிறப்பு அங்காடிகளில் மானிய விலையில் வெங்காயம் கிலோ ரூ.45-க்கு விற்பனை தொடங்கியது. இதுதொடர்பாக கூட்டுறவுத்துறை அலுவலர்கள் கூறுகையில், ‘‘மாவட்டத்துக்கு தற்போது 7 டன் வெங்காயம் வந்துள்ளது.

9 சிறு கூட்டுறவு சிறப்பு அங்காடி மூலம் விற்பனை செய்யப்படுகிறது. கூட்டத்தை பொறுத்து ஒருவருக்கு ஒரு கிலோ முதல் அதிகபட்சம் 2 கிலோ வெங்காயம் விற்பனை செய்கிறோம்.

மேலும், வெங்காயம் வாங்க வருபவர்கள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட அரசின் விதிமுறைகள் பின்பற்றப்படுகிறது,’’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

6 mins ago

சுற்றுச்சூழல்

8 mins ago

தமிழகம்

36 mins ago

தமிழகம்

58 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

சினிமா

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

2 hours ago

மேலும்