பர்கூர் பேரூராட்சி பகுதியில் ரூ.24 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் சுத்திகரிப்பு மையத்தை எம்எல்ஏ ராஜேந்திரன் தொடங்கி வைத்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தேர்வுநிலை பேரூராட்சிக்குட்பட்ட எம்ஜிஆர் நகர், சின்ன பர்கூர், நேரலகோட்டை ஆகிய பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சட்டப்பேரவை உறுப் பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 24 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் சுத்திரிப்பு மையம் அமைக்கப்பட்டது.
இந்த மையத்தை பொது மக்கள் பயன்பாட்டுக்கு பர்கூர் எம்எல்ஏ ராஜேந்திரன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், பேரூராட்சி செயல் அலுவலர் சேம் கிங்ஸ்ட்ன், பணி மேற் பார்வையாளர் மகேந்திரன், வரி தண்டலர் முகமது பாரூக், சுகாதார மேற்பார்வையாளர் விஜயகுமார், அதிமுக நகர செயலாளர் துரைஸ் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 mins ago
சுற்றுச்சூழல்
21 mins ago
விளையாட்டு
30 mins ago
தமிழகம்
28 mins ago
தமிழகம்
53 mins ago
கல்வி
1 hour ago
சுற்றுச்சூழல்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
3 hours ago