போக்குவரத்துக் கழக கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

By செய்திப்பிரிவு

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக அனைத்து சங்க கூட்டமைப்பு சார்பில், கிருஷ்ணகிரி நகர் கிளை போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு 14- வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்கக் கோரி, தொமுச மத்திய சங்க துணை பொதுச்செயலாளர் வரதராஜன் தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. பணிமனை தலைவர் ராஜேந்திரன் வரவேற்றார்.

ஆர்ப்பாட்டத்தில், 14-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும். 25 சதவீத போனஸ் வழங்க வேண்டும். தீபாவளி பண்டிகை முன்பணம் வழங்க வேண்டும். ஊரடங்கு காலத்தில் பிடித்தம் செய்த ஊதியத்தை திரும்ப வழங்க வேண்டும்.

போக்குவரத்து தொழிலாளர் களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கம் எழுப்பினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

11 mins ago

தமிழகம்

19 mins ago

இந்தியா

33 mins ago

விளையாட்டு

37 mins ago

தமிழகம்

49 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

உலகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்